Friday 31 August 2007

இதுதான் வாழ்க்கையா????

நான் வாழ எண்ணிப் பிறந்தேன்
உன் சாவை எண்ணி மடிந்தேன்
இதுதான் வாழ்க்கையா????

காவேரி பிரச்சனையின் தீர்வு

அன்பே உனைபிரிவதை எண்ணி
நான் சிந்திய கண்ணீர் போதுமடா
இந்த காவேரிப்பிரச்சனையை தீர்க்க.......

Monday 27 August 2007

(அ)யோக்கியன்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
அயோக்கியனும் அல்ல
உன் இன்பத்திற்காக என் காதலை
விடும்
யோக்கியனும் அல்ல
அன்றும் இன்றும் என்றும்
நான் உன் காதலன்....

நானும் கடவுள் தான்

உலகம் சொன்னது!
இறைவன் என்பவன் தன்னை
மறந்து பிறரை மகிழ்விப்பவன்

என் இதயம் சொன்னது!
அவ்வகையில் நீயும் இறைவன் என்
சிந்தித்தேன்.....இதயம் சொல்வதும் சரி

புரியவில்லையா?
சிந்தியுங்கள் நானும் என் சோகம் மறந்து
பிறரை மகிழ்விக்கின்றேன்.....

Friday 24 August 2007

என் மரணம்

சுடர் விட்டிருந்ததடி என் வாழ்வு
சுழற்றிவிட்டாயே நீ வந்து

ஓடிய மாதங்களில் ஓடியதே உன் காதல் - ஆனால்
ஓடிய மாதங்களில் கூடியதடி என் காதால்

புழு போல் துடிக்கிறதடி என் இதயம் - அதை
புழுங்கித்தள்ளுதடி என் இதழ்கள் - அதை
மறைக்கத்துடிக்கிறதடி என் மரணம்

ஆனால்....
மறைந்துபோவதில்லை காதல் என்றும்........

Thursday 23 August 2007

காதல் தீ

அன்பே!!!!
ஆபத்தென நீ அழைத்தபோது பத்தியது
உன் வீட்டுத்தீயல்ல என்
காதல் தீ

என் செய்வேன் நான்

மணவறையில் இருக்கும் போதும்...
என் மனம் உன்னை தானடா எண்ணுகின்றது...
பிணவறை செல்ல அஞ்சி... மணவறை வந்துவிட்டாயென
என் மனம் எனை கேலி செய்கின்றதடா என் செய்வேன்...

உன் சுவாசக்காற்றில் கலந்த என் மூச்சு கூட என்னை
ஏழனமாய் சிரிக்கின்றது என் செய்வேன்....
உன் நினைவுகளில் ஊஞ்சல் ஆடும் என் இதயத்தை.....
எவனோ கட்டிய தாலி வருடிய பின்பும்....
உன் நினைவுகள் எனை விட்டு கலயவில்லையே

என் செய்வேன் என் உயிரே...

Wednesday 22 August 2007

உனக்காகத்தான்

அன்பே...

நீ கேட்டதும் தந்த என் இதயத்தை தயவு செய்து
திருப்பிக்கொடுத்துவிடு...
ஏனெனில் எம் இதயம் இணையுமெனில்
உன் இதயம் கிழியுமாம்....

கிழிக்கும் ஊசியாக நான் இருக்க மாட்டேன்
தைக்கும் ஊசியென உன்னிடம் காட்டிக்கொள்ளவும் மாட்டேன்
ஆனால் அன்பே..... உன் முன்
துரோகியாக என்னால் காட்சியழிக்க முடியும்
என் செய்வேன் உனக்கு வலிக்கத்தான் செய்யும்
ஆனாலும் அவ்வலி நிரந்தரம் அல்ல....
அது வலியுமல்ல... ஆமாம் மருந்து...
என் உயிரே நீ எனை மறக்க நான் உனக்களித்த மருந்து
நான் கொடுத்த மருந்து கசக்கத்தான் செய்யும் இருப்பினும்
என்னுயிரே பொருத்துக்கொள்... எல்லாம் உன் நன்மைக்கே.....

இப்படிக்கு...
உன் வலி தாங்கா துரோகி....

முட்டாள்

கேட்டுத்தருவது தான் பாணம்
கேட்காது தருவது தான் பாசம்

ஆனால்!!!!!

இவ்வுலகில் கேட்டுத்தரும் பாணமே
கிடைப்பதில்லை

ஆகையால்.....

கேட்காதுதரும் பாசத்தை
தேடுபவ்ர்கள் முட்டாள்கள்

மானிடரே நீங்களும் முட்டாளாகாதீர்கள்.......

Tuesday 21 August 2007

நண்பா!!!

சிரித்திடுவார் பலர் உணைப்பார்த்து
வெறுத்திடுவாய் நீ அதைப்பார்த்து
உனக்கோ உடலில் ஊனம்
பலருக்கோ மனதில் ஊனம்


பாயமுடியாதென வருந்துகின்றாய் நீ
பாய்வதனாள் வருத்துகின்றார் சிலர்
எனவே சொல்கின்றேன் வருந்தாதே.....

நீயோ சிறந்தவன்
அவரோ சிதைப்பவர்

ஆகையால் சொல்லிவற்றை நீ அவர்க்கு
தானே நிறுத்திடுவர் நெகிழ்ந்து இவற்றை....

தேவையில்லை

இறந்தபின் நரகம் அனுபவிக்கத்தேவையில்லை
அவற்றை அனுபவிக்கின்றோம் இப்போதே
வாழ்க்கையில் அழுவதற்க்கு
தேவையில்லை
அழுது முடித்துவிட்டோம் இம்மண்ணை
அடையும் போது...

பிறக்கமுடிந்த எம்மால்!!!

பிறந்துதான் பார்ப்போம் என் பிறந்துவிட்டோம்
வாழ்ந்துதான் பார்ப்போம் எனும் நோக்கமில்லை
அழுதுதான் பார்ப்போம் என அழுதுவிட்டோம்
துடைத்துதான் பார்க்க எவருமில்லை

சிரித்துத்தான் பார்ப்போம் என் ஆசை கொண்டோம்
அழத்தெரிந்ததால் சிரிக்கமுடியவில்லை
இறந்துதான் பார்ப்போம் என் ஆசை கொண்டோம்
நரகத்தை நீங்க விரைவில் அனுமதி இல்லை

Monday 20 August 2007

அறியா மானிடரே

நட்பிற்க்கும், காதலிற்கும் வேறுபாடு
அறியாத மானிடரே கேளீர்
நட்பு என்பது இரு மனங்களின் சேர்க்கை
காதல் என்பது இரு உயிர்களின் சேர்க்கை

பிரிந்த நட்பு பல பசுமையான உணர்வுகள் சொல்லும்
பிரிந்த காதல் பலரை மடித்துச்செல்லும்
நட்பின் வழியில் காதல்வரின் அது போலி
காதலின் வழியில் நட்புவரின் அது விதி

காத்திருந்தேன்

ஆடியில் உனைப்பார்த்து
மாடியில் காத்திருந்தேன்
மாடியில் நீ வராததால்
மடித்துவிட்டேன்........ என் மனதை
மட்டும் அல்ல என் உயிரையும்

ஆனால்!!!!!!!!!

மடிந்தது என் மனம் மட்டுமல்ல - உன்
மனதும் தான் எனேனில் உன்
மனம் என்னிடம்

ஆசை கொண்டாய்

நான் உன்மேல் ஆசை கொண்டேன்
நீ என் பணம்மேல் ஆசை கொண்டாய்

நான் உன் மனம் என்னும் விட்டின்மேல்
ஆசை கொண்டேன்
நீ என் பணமாளிகைமேல்
ஆசை கொண்டாய்

ஆனால் இன்று.....

நான் இவற்றை இழத்து விட்டேன்
காரணம்
உன் ஆசையடி.................

நரகம்

நரகத்தை அனுபவிக்க ஆவலாய் உள்ளதா
இதயத்தில் இடம்பிடித்தவரை - ஒரே
ஒருமுரை பிரிந்துபார் அப்போது புரியும்
அந்த நிலைதான் நரகம்

சொல்லிவிடு

துடிக்கின்றேன் சொல்லிவிடு
துடிப்பதேனோ சொல்லிவிடு

வலிக்கிறது சொல்லிவிடு
வலிப்பதேனோ சொல்லிவிடு

நடிக்கின்றாய் சொல்லிவிடு
நடிப்பதேனோ சொல்லிவிடு

நொடிக்கிடனே சொல்லிவிடு
நெறிசல் ஏனோ சொல்லிவிடு

தடுப்பதென்ன சொல்லிவிடு
தடுப்பவனை சொல்லிவிடு

பிடிப்பதென்ன சொல்லிவிடு
பிடிப்பவனை சொல்லிவிடு

நினைப்பதனை சொல்லிவிடு
நினைப்பவனை சொல்லிவிடு

சொல்லிவிட்டேன் நான் இவற்றை
சொல்லிவிடு நீ அவற்றை.................

படையெடுத்து வாருங்கள்

பாசக்கயிற்றை வீசி பாசங்களை அறுக்கும் எமனும்
குண்டுகளை வீசி துண்டுகள் ஆக்கும் இவரும்
விசங்களை கக்கி விசமாக அழிக்கும் பாம்பும்
வஞ்சத்தை காட்டி விசமத்தை புறர்க்கழிக்கும் இவரும்

ஒன்றுதான்......... ஆகையால்!!!!!!!!!!!!!!

தாருமாராய் ஆடி தமிழ் தரணியை அழித்து
பாசத்தையும் ஒழித்த
பாதகத்தை விதைத்த
இவ் மதம்பிடித்தவரை அழிக்க
படையெடுத்து வாரீர் பதட்டமென்ன தயக்கமென்ன

தவறிய எம் தாயகத்தை படையெடுத்து மீட்போம் என்
கரம்கோத்து வாருங்கள் கலத்தினிலே இறங்கிடுவோம்...............