Saturday 29 September 2007

துடிக்கின்றேன்

என் மனதைப்புதைத்த
உன் அழகை
மறைக்கத்துடிக்கின்றேன்
ஜயத்தால் அல்ல வேறு
மனதை புதைக்காமல்
இருப்பதற்கு

Wednesday 26 September 2007

சாமாதானம்

கல்லெடுத்து சிலைவடித்த கலைஞனும்
சொல்லெடுத்து கவிகொடுத்த கவிஞனும்
உருவாக்கிய சமாதானம்
இன்று............
ஜடப்பொருளாய் உள்ளது
மீண்டும் உயிர் கொடிக்க வேண்டும்
உதவிக்கரம் தருவீர்களா மனிதர்களே?

Tuesday 25 September 2007

சொல்லடி என் காதலி?

உனை பார்க்க சூரியன் வரும்முன்னே
நான் ஓடிவந்தேன் சூரியனிடம் போட்டியிட அல்ல
உன்னிடம் காதல் பிச்சை கேட்க
ஆனால்..................
என்னைத்தேடி காலன் வரும்முன்னே
நீ ஓடிவரவில்லை ஏன்
பணம் என்னைவிட்டு ஓடிவிட்டதென்றா?
சொல்லடி என் காதலி?????

Sunday 23 September 2007

பிச்சை

உனக்கும் எனக்கும் உள்ளதோ ஓர் வேறுபாடு
நீ பணப்பிச்சை கேட்கின்றாய்
நான் காதல் பிச்சை கேட்கின்றேன்!!!!!!!!!

Saturday 22 September 2007

அ(வி)ஞ்ஞானி

விஞ்ஞானம் சொன்னதடி
ஓருயிர்க்கு என ஓர் இதயம்
அஞ்ஞானி சொல்கின்கேன்றேன்
உள்ளதடி என்னிடம் ஈரிதயம்
ஒன்று எனது மற்றயது உனது
முடியவில்லை பெற்றுவிடு எனதை
காத்திடுவேன் உனதை
அன்பே......
முடிவு செய் என் மனதா
இல்லை......
என் உயிரா???????

பிடித்ததை எடு நடிப்பதை விடு.......

Sunday 16 September 2007

சரியா.... தவறா.......

பெண் மேல் காதல் கொண்டால் சரியா தவறா - இல்லை
பொன் மேல் காதல் கொண்டால் சரியா தவறா

பிறப்பினில் ஆசை கொண்டால் சரியா தவறா - இல்லை
இறப்பினில் ஆசை கொண்டால் சரியா தவறா

மண்ணில் பற்று கொண்டால் சரியா தவறா - இல்லல
விண்ணில் பற்று கொண்டால் சரியா தவறா

பொய் தனை கைக்கொண்டால் சரியா தவறா - இல்லை
மெய் தனை கைக்கொண்டால் சரியா தவறா

பெண்ணென மகிழ்ந்து கொண்டால் சரியா தவறா - இல்லை
பெண்ணென நெகிழ்ந்து கொண்டால் சரியா தவறா

வாழ்வை என்னி என்னுள் அழுது கொண்டால் சரியா தவறா - இல்லை
சாவை என்னி என்னுள் சிரித்துக்கொண்டால் சரியா தவறா

நான் உன்னை மணந்து கொண்டால் சரியா தவறா - இல்லை
நான் என்னை மடித்துக் கொண்டால் சரியா தவறா

அன்பே!!!!!!!!

உன்மேல் காதல் கொண்டால் சரியா தவறா - இல்லை
மண்மேல் காதல்கொண்டால் சரியா தவறா

தவறு என்றால் தவித்திடும் என் ஜீவன்
அன்பே!!! நீ செய்வது சரியா? தவறா?

Friday 14 September 2007

நன்கு அறிவேன்

காதல் கதைகளை வாசிக்கும் - நீ ஏன் என்
காதல் கடித்த்தை தொட மறுக்கின்றாய்

சோடிகளை சேர்க்கும் - நீ ஏன் என்
சோடியாக மறுக்கின்றாய்

பாசங்களை வளர்க்கும் - நீ ஏன் என்
பாசத்தையே மறுக்கின்றாய்

மறுத்த காரணம் நான் அறியேன்
ஆனால்!!!!!! மறுத்தவளே.......

உனை நான் நன்கு அறிவேன்......

தயக்கம்

கடிதத்தில் காதல் சொல்லிய என்னால்
உன் முன் வரத்தயக்கம் காரணம்
வெட்கமல்ல பயம்
ஆமாம்........
எங்கே எனைப்பார்த்து
வெறுத்து விடுவாய் என்றல்ல
நீ சம்மதம் சொல்லாவிட்டால்.............

Monday 10 September 2007

பே(போ)தை

போதையிலும் தன் நிலை மறவா
ஆடவன்
பேதையினால் தன் பாதை
மறந்தான்

மாமிமார்கள்

வீட்டுக்கு விளக்கேற்ற
மகாலஷ்மி வந்தாச்சு என்பார்கள்
எங்களுக்குத்தான் தெரியும் சோற்றுக்கு
அடுப்பேற்றப்போகிறவர் நாங்களென்று
எங்களை மட்டுமா மாட்டைக்கூடத்தான் மகாலக்ஷ்மி
என்கின்றார்கள்
கறக்கத்தான் நினைக்கிறார்கள் பாவம்
மன்னித்துவிடுங்கள் அவர்கள் மாமிமார்கள்.......

Friday 7 September 2007

என் வாழ்வில்!!!!!!!!!!!

இன்பம் கிடைக்குமா என் வாழ்வில்
அன்பும் கிடைக்குமா என் வாழ்வில்
துன்மம் வேண்டுமா என் வாழ்வில்
நண்பன் வேண்டுமா என் வாழ்வில்

இன்பம் உள்ளதோ என் வாழ்வில்
அன்பும் உள்ளதோ என் வாழ்வில்
அன்பு உள்ளதா இவ்வுலகில்
கிடைக்குமா எனக்கு பங்கதனில்........

Wednesday 5 September 2007

உறவு

அன்பே!!!!!

எம் உறவின் அர்த்தம் புரியாது
தவித்தபோது
அது மூன்றெழுத்தென்றாய்
காதலென எண்ணி நான் காதல் தீ
வளர்த்தேன்

ஆனால்!!!!!!!!

பாவி நீயோ
நட்பு எனும் கங்கையால்
அதை அணைக்கச்சொல்கின்றாய்

என் செய்வேன் என் சகியே!!!!!

காதல் பரீட்சை

காதல் பரீட்சை செய்ய உன்னிடம் வந்தேன்
காலன் தேடி என்னிடம் வந்தான்
நான் பரீட்சை செய்யும் முன்னே என்
மதிப்பெண்களை குறித்துவிட்டான் போலும்

ஆயினும் பெண்ணே!!!!!

உன் சம்மதம் அக்காலனையும்
விதியையும் வென்றுவிடும்
தவிக்கின்றேன் சொல்லிவிடு
உன் சம்மதம்................

கொடுத்துவிட்டார்கள்

பூவான உன்னை
தேனான என்னிடம்
தரச்சொன்னேன்

ஆனால்!!!!

உன் பெற்றொர்கள்
உன்னை பெற்றோல்
ஊற்றி தீயிடம்
கொடுத்துவிட்டனர்


என்செய்வேன் என் சகியே????