Tuesday 30 October 2007

ஒரு தலைக்காதல்

அன்பே என்றேன் காதலுடன்
அன்பே என்றாய் ஆசையுடன்
எனை என நினைத்தேன்
திசை என் நண்பனன நோக்கியதை
இன்று தான் அறிந்தேன்.....

Monday 29 October 2007

உண்மை

நிலவே நீ இம்மக்களை சுழல்கின்றாய்
இவர்களோ பிறரை சுழற்றுகின்றார்கள்
உன் உடலில் சிறுகிடங்குகள்
இவர்கள் மனதில் புதைகிடங்குகள்

அருகில் நீ கறுப்பு
இவர்கள் மனதே கறுப்பு
நீ தருவது நிலாவெளிச்சம்
இவர்கள் தருவது வெடிவெளிச்சம்

உனக்கு உரித்து அழகு
இவர்க்கு உரித்து அழிவு

Tuesday 23 October 2007

(ம)(மா)து

மாது உனை நினைத்து நான் மது அருந்தி
உயிர் துறக்க இருப்பது தெரிந்தும்
அவன் பணமதை நினைத்து நீ
குளிர்பானம் தனை அருந்தி மகிழ்கிறாய்.....

பணம்

நான் கேட்டதோ உந்தன் மனப்பெட்டி
உனக்கு வேண்டியதோ எந்தன்
பணப்பெட்டி
நீ எனக்கு தந்ததோ ஓர் சவப்பெட்டி.....

Monday 22 October 2007

முதலும் முடிவும்

இறைவன் என்னைப்படைத்த அக்கணமே
உன்னைப்படைத்ததன் காரணம் நாமிருவரும் மணக்கத்தான்
என நினைத்திருந்தேன்
நீயோ என் தமைய்னை மணந்துவிட்டாய்

இடிந்தது என் மனம்
முடிந்தது உன் மணம்

சிதைந்தது என் வாழ்வு
சிறக்கட்டும் உன் வாழ்வு

Tuesday 9 October 2007

அன்றும் இன்றும்

அன்று!!!

உனக்கு வெள்ளி எனக்கோ வில்லி
உனக்கு விடுதலை எனக்கோ அறுதலை

மறுநாள்
காலை!!!!

நீ தூக்கிக்கட்டுவாய் தாலி
நான் தூக்கை கட்டுவேன் நாடி - அவள்
ஊட்டி விடுவாள் பால் உனக்கு - சிலர்
ஊற்றி விடுவார் பால் எனக்கு

மாலை!!!

உன் வீட்டுஜோதிக்கு ஏற்றுவாள் அவள் தீபம்
என் சோதிக்கும் ஏற்றுவார் சிலர் தீ

இன்று!!!!

படித்து முடிப்பாய் - என் இவ் வரலாற்றை
பார்த்து ரசிப்பேன் நான் இங்கு
இங்கு என்பது
சொர்க்கமா????
நரகமா???
அவன் கையில்
சென்றுவருகிறேன் என் உயிர் நண்பா!!!
என்றும் உன்..................

Friday 5 October 2007

மகிழமறுத்ததேனோ????

அழகிய சோலையிலே உன்
சேலைகண்டு மகிழ்ந்தேன்

அழகிய என் மாளிகையில் நீ
என்னைக்கண்டு மகிழ்ந்தாய்

இன்றும்......

நான் உன்னை தீவினிலும்
கண்டு மகிழ்கிறேன்

ஆனால்.....

நீ குடிசையில் என்னைக்கண்டு
வெறுப்பதேனோ???