Friday 23 November 2007

முடியவில்லை

பெற்றெடுக்கையில் வலிக்கவில்லை
உன்னை தொட்டெடுக்கையிலும் வலிக்கவில்லை

பாலூட்டையிலும் வலிக்கவில்லை
உன்னை பாராட்டையிலும் வலிக்கவில்லை

சீராட்டையிலும் வலிக்கவில்லை
உன்னை சிரசில் ஆட்டையிலும் வலிக்கவில்லை
மார்பினில் ஆட்டையிலும் வலிக்கவில்லை

ஆனால்...... இன்று வலிக்கிறது
காரணம் உன் சொற்களின் வலிமை

தாங்கமுடியவில்லை நிறுத்திவிடு அதை
இல்லை கொன்று விடு என்னை......

Thursday 15 November 2007

ஓ(கா)வியம்

ஓவியம் வரைந்த என்னை
காவியம் வரைய வைத்த காதலியே!!
உன் திரைச்சீலை கலைத்து வா முன்னே
அல்லது என் பிணவோலை
தேடி வரும் உன் முன்னே!!!!

Sunday 11 November 2007

படைப்பு

உனை வடித்த பிரம்மன் இம்மண்ணில்
எனை வடித்ததேனோ கன்னி உன்னைக்கண்டு
இம்மண்ணில் நான் மடிந்திடத்தானோ......

Monday 5 November 2007

நண்பனே!!!!!!!!!

எங்கோ பிறந்து.... எங்கோ வளர்ந்த.... நீ
இன்று... எனக்காக உருகுகின்றாய்....
எனக்காக சிந்திக்கின்றாய்....
எனக்காக சுரக்கின்றாய் உன் கண்ணீரை.....

நண்பனே....
உனக்காக நானும் உருகுவேன்
உனக்காக சிந்திப்பேன்...
ஆனால் நண்பா உனக்காக சுரக்க மட்டும் என் கண்ணில்
கண்ணீர் இல்லையடா... எனெனில்
நமக்கெனத்தான் நான் அழுதுமுடித்துவிட்டேனே...

நண்பனே நீ..
தோல் கொடுக்கையில் என் நண்பனாகினாய்....
மடி கொடுக்கையில் என் தாயாகினாய்....
அறிவுரைகளில் என் தந்தையாகினாய்.....
அரவணைப்பில் என் மழலையாகினாய்.....
கரம் கொடுத்து நீ உயர்த்திவிட்டாய்

உன் கரங்களை ஒருபோதும் நான் விடமாட்டேன்
ஏனினில் அது உதவிக்கரம்மட்டுமல்ல...
என்னை வழி நடத்தும் கரங்கள்...

நண்பனே.....
உன் கரங்களுக்கு கோடி முத்தங்கள்..
தயவு செய்து நீ ஒருபோதும் உன் கரங்களை உதறிவிடாதே....
தோள்கொடுத்த உன் நட்பிற்கு நன்றிகள் கோடி
நட்பே உன் கற்பை நான் என்றும் அழியாது காப்பேன்....