Friday 28 March 2008

சொன்னார்கள்… முடியவில்லை

உன்னை மறந்து விடு என்றார்கள்
நானோ.. மறுத்தேன்…
மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்
நானும்
மறக்க வேண்டும் என்று தான்
நினைத்துக் கொண்டேன் ….
இன்று வரை
உன்னை
மறக்க வேண்டும் என்பதற்காகவே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!

ஆயுள் கைதி ஆகின்றேன்

நான் ஆயுள் கைதி
ஆகின்றேன் !!!!!!!!!
உன் மனதில்
என்னை என்றும்
சிறை வைப்பாய் என்றால் !!!!!

Monday 24 March 2008

பண்புள்ள பெண்ணே

பண்புள்ள பெண்ணே உன்மேல் அன்புள்ள
காதலன் சொல்கின்றேன் வம்புகள் செய்யாது
சொல்லிவிடு உன் காதலை என்னிடம்
சொல்லாமல் வாட்டாதே மடிந்திடுவேன் நானே!!!!!!

பாவி

உருகா கல்லெனும் எந்தன் மனது
உருகிய காரணமும் நீயே
உருகிய என் மனதை
உருக்கிய பாவியும் நீயே.....

வாழ்த்துகிறேன் நான்

இன்றோடு நீ இவ்வுலகம் கண்டு 20 ஆண்டுகள் ஆகின்றன
இருப்பினும் உன்னை இவ்வுலகம் கண்டதில்லை

ஆகையால்.......


வாழ்த்துகின்றேன் இன் நல் நாளில்
உனை இவ்வுலகம் காண சிறப்பாயென
வாழ்த்திபவள் சிறியவலாயினும் வாழ்த்து பெரியதே....

நினைக்கவில்லை

ஆணையிட்டுச்சொல்கின்றேன்
நான் உன்னை நினைக்கவில்லை
ம்ம்ம்ம்…….
உன்னை மறந்தால் தானே….
நினைப்பதற்கு….

என்னை மறந்துவிடுகின்றேன்

உன்னையே எப்பொழுதும் – என்னுள்
நின்னைத்துக்கொண்டிருப்பதினால் தான்
சில சமயம்
நான் என்னையே ……
மறந்துவிடுகின்றேன் !!!!

Thursday 20 March 2008

ஆசை

ஆடைகொண்டு அங்கம் மறைத்த
அவளால்
ஆசை கொண்டு என்னை மணக்க
முடியவில்லை....

Saturday 15 March 2008

படைத்தது

இறைவன் மலரென பெண்களை படைத்தது
ஏனேனில்........
பேசா மலர்கள் வாடுவது போல
பேசும் மலர்கள் வாடத்தானோ!!!!!!!

எம் உறவு தான் என்ன?

நீ எனக்காக தினம் உயிர் எடுத்தாயே
நீ என்ன எந்தன் தாயாரா?

நீ எனக்கு திகைகள் தொடுத்தாயே
நீ என்ன எந்தன் தந்தையாரா?

நீ நான் மடிய உன் உயிர் மடித்தாயே
நீ என்ன எந்தன் தாரமா?

நீ என்னால் பூத்தாயே
நீ என்ன எந்தன் மழலையா?

நீ ஏன் வருகைக்காக காத்திருப்பதால்
நீ என்ன எந்தன் பக்தையா?

நீ என் பெயரை சூரியகாந்தி என சூடியதால்
நீ என்ன எந்தன் பரம்மரை வாரிசா?

பூவே நீ என்ன எந்தன் நிலழா????