Wednesday 22 August 2007

உனக்காகத்தான்

அன்பே...

நீ கேட்டதும் தந்த என் இதயத்தை தயவு செய்து
திருப்பிக்கொடுத்துவிடு...
ஏனெனில் எம் இதயம் இணையுமெனில்
உன் இதயம் கிழியுமாம்....

கிழிக்கும் ஊசியாக நான் இருக்க மாட்டேன்
தைக்கும் ஊசியென உன்னிடம் காட்டிக்கொள்ளவும் மாட்டேன்
ஆனால் அன்பே..... உன் முன்
துரோகியாக என்னால் காட்சியழிக்க முடியும்
என் செய்வேன் உனக்கு வலிக்கத்தான் செய்யும்
ஆனாலும் அவ்வலி நிரந்தரம் அல்ல....
அது வலியுமல்ல... ஆமாம் மருந்து...
என் உயிரே நீ எனை மறக்க நான் உனக்களித்த மருந்து
நான் கொடுத்த மருந்து கசக்கத்தான் செய்யும் இருப்பினும்
என்னுயிரே பொருத்துக்கொள்... எல்லாம் உன் நன்மைக்கே.....

இப்படிக்கு...
உன் வலி தாங்கா துரோகி....

2 comments:

Anonymous said...

awwww :( :(

Krish said...

this is one of ma favourite... ny thanx dear...