Tuesday 21 August 2007

நண்பா!!!

சிரித்திடுவார் பலர் உணைப்பார்த்து
வெறுத்திடுவாய் நீ அதைப்பார்த்து
உனக்கோ உடலில் ஊனம்
பலருக்கோ மனதில் ஊனம்


பாயமுடியாதென வருந்துகின்றாய் நீ
பாய்வதனாள் வருத்துகின்றார் சிலர்
எனவே சொல்கின்றேன் வருந்தாதே.....

நீயோ சிறந்தவன்
அவரோ சிதைப்பவர்

ஆகையால் சொல்லிவற்றை நீ அவர்க்கு
தானே நிறுத்திடுவர் நெகிழ்ந்து இவற்றை....

தேவையில்லை

இறந்தபின் நரகம் அனுபவிக்கத்தேவையில்லை
அவற்றை அனுபவிக்கின்றோம் இப்போதே
வாழ்க்கையில் அழுவதற்க்கு
தேவையில்லை
அழுது முடித்துவிட்டோம் இம்மண்ணை
அடையும் போது...

பிறக்கமுடிந்த எம்மால்!!!

பிறந்துதான் பார்ப்போம் என் பிறந்துவிட்டோம்
வாழ்ந்துதான் பார்ப்போம் எனும் நோக்கமில்லை
அழுதுதான் பார்ப்போம் என அழுதுவிட்டோம்
துடைத்துதான் பார்க்க எவருமில்லை

சிரித்துத்தான் பார்ப்போம் என் ஆசை கொண்டோம்
அழத்தெரிந்ததால் சிரிக்கமுடியவில்லை
இறந்துதான் பார்ப்போம் என் ஆசை கொண்டோம்
நரகத்தை நீங்க விரைவில் அனுமதி இல்லை