Monday 20 August 2007

அறியா மானிடரே

நட்பிற்க்கும், காதலிற்கும் வேறுபாடு
அறியாத மானிடரே கேளீர்
நட்பு என்பது இரு மனங்களின் சேர்க்கை
காதல் என்பது இரு உயிர்களின் சேர்க்கை

பிரிந்த நட்பு பல பசுமையான உணர்வுகள் சொல்லும்
பிரிந்த காதல் பலரை மடித்துச்செல்லும்
நட்பின் வழியில் காதல்வரின் அது போலி
காதலின் வழியில் நட்புவரின் அது விதி

காத்திருந்தேன்

ஆடியில் உனைப்பார்த்து
மாடியில் காத்திருந்தேன்
மாடியில் நீ வராததால்
மடித்துவிட்டேன்........ என் மனதை
மட்டும் அல்ல என் உயிரையும்

ஆனால்!!!!!!!!!

மடிந்தது என் மனம் மட்டுமல்ல - உன்
மனதும் தான் எனேனில் உன்
மனம் என்னிடம்

ஆசை கொண்டாய்

நான் உன்மேல் ஆசை கொண்டேன்
நீ என் பணம்மேல் ஆசை கொண்டாய்

நான் உன் மனம் என்னும் விட்டின்மேல்
ஆசை கொண்டேன்
நீ என் பணமாளிகைமேல்
ஆசை கொண்டாய்

ஆனால் இன்று.....

நான் இவற்றை இழத்து விட்டேன்
காரணம்
உன் ஆசையடி.................

நரகம்

நரகத்தை அனுபவிக்க ஆவலாய் உள்ளதா
இதயத்தில் இடம்பிடித்தவரை - ஒரே
ஒருமுரை பிரிந்துபார் அப்போது புரியும்
அந்த நிலைதான் நரகம்

சொல்லிவிடு

துடிக்கின்றேன் சொல்லிவிடு
துடிப்பதேனோ சொல்லிவிடு

வலிக்கிறது சொல்லிவிடு
வலிப்பதேனோ சொல்லிவிடு

நடிக்கின்றாய் சொல்லிவிடு
நடிப்பதேனோ சொல்லிவிடு

நொடிக்கிடனே சொல்லிவிடு
நெறிசல் ஏனோ சொல்லிவிடு

தடுப்பதென்ன சொல்லிவிடு
தடுப்பவனை சொல்லிவிடு

பிடிப்பதென்ன சொல்லிவிடு
பிடிப்பவனை சொல்லிவிடு

நினைப்பதனை சொல்லிவிடு
நினைப்பவனை சொல்லிவிடு

சொல்லிவிட்டேன் நான் இவற்றை
சொல்லிவிடு நீ அவற்றை.................

படையெடுத்து வாருங்கள்

பாசக்கயிற்றை வீசி பாசங்களை அறுக்கும் எமனும்
குண்டுகளை வீசி துண்டுகள் ஆக்கும் இவரும்
விசங்களை கக்கி விசமாக அழிக்கும் பாம்பும்
வஞ்சத்தை காட்டி விசமத்தை புறர்க்கழிக்கும் இவரும்

ஒன்றுதான்......... ஆகையால்!!!!!!!!!!!!!!

தாருமாராய் ஆடி தமிழ் தரணியை அழித்து
பாசத்தையும் ஒழித்த
பாதகத்தை விதைத்த
இவ் மதம்பிடித்தவரை அழிக்க
படையெடுத்து வாரீர் பதட்டமென்ன தயக்கமென்ன

தவறிய எம் தாயகத்தை படையெடுத்து மீட்போம் என்
கரம்கோத்து வாருங்கள் கலத்தினிலே இறங்கிடுவோம்...............