Wednesday 21 May 2008

இருப்பாயா என் நண்பா....

தனிமையில் நீ கவிஞனாய் இரு
கட்டளைகளிள் அரசனாய் இரு
வேலையில் விஞ்ஞானியாய் இரு
இறப்பினில் வரலாறாய் இரு

நீ இறக்கும் அக்கணம் வரை
என் நண்பனாய் இரு...

இழக்கின்றாய்...

என்று நீ உன் பணத்தை இழக்கின்றாயோ
அன்று நீ உண்மையில் எதையும் இழக்கவில்லை

என்று உன் உடல் நலம் குன்றப்படுகின்றதோ
அன்று நீ எதையோ இழக்கின்றாய்

இருப்பினும் நண்பா....

என்று நீ உன் நன்னடத்தையை
அன்று நீ எல்லாவற்றையும் இழக்கின்றாய்.....