வெற்றிலை போட்ட வானத்தைப்பார்த்தேன்....
உன் கண்ணங்கள் சிவந்ததை அறிந்தேன்...
நீல வானில் நிலவைப்பார்த்தேன்...
நிலவின் ஒளியை குடித்த உன் முகத்தை அறிந்தேன்...
மழையூட்டும் மண்ணின் வாசத்தை சுவாசித்தேன்....
உன் கூந்தலின் இயற்கை நறுமணம் அறிந்தேன்...
சில்லென்ற காற்று எனை அண்டக்கண்டேன்
உன் கைகளை வருடிய அந்நிலை அறிந்தேன்...
பஞ்சுமிட்டாய் என் நாக்கில் கரைய
உன் உதடுகளில் கரைந்த இனிப்பினை அறிந்தேன்...
எனக்குள் அடிமையாக வந்து
என்னை அரசாலு என்அன்பே....
உனக்குள் அரசனாக வந்து
என்னை உனக்கு அடிமை ஆக்கிவிட்டேன் என்றோ...
Friday, 21 August 2009
ஈழம்
ஈழத்து மண்ணிலே தான் வாழ்வேன் என்றவரெல்லாம்
ஈழத்துடனே சென்றுவிட்டனர்போலும்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…
ஈழத்து சிறுவர்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டனர்
ஈழத்து பிணக்குழியில் பள்ளிப்பைகளுடன் உக்கியபடி…
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…
ஈழத்து இளைஞரெள்ளாம் இங்கணம் கானோமே
ஈழத்து முகாமில் பணயக்கைதிகளாய்
தவறிய தாயகம் என்பதா
தவத்திய தாயகம் என்பதா…
தவறிய எம் தாயகத்தை எதைக்கொடுத்து மீட்பேன்…
Subscribe to:
Posts (Atom)