Wednesday 6 February 2008

என்னால் முடியவில்லை

அன்பே...


ஒருவார்த்தை சொல்லி உனைவிட்டுப்பிரிந்து விட்டேன
பல வார்த்தைகள் என்னுள் புதைந்ததை யாரறிவார்.....


எங்கிருந்தாலும் நீ நன்றே வாழ்க...
ஆனால் தயவுசெய்து என் முன் வந்திடாதே..
ஏனெனில் புதைந்திருந்த வார்த்தைகள் எல்லாம்
எட்டிப்பாக்கின்றன உனைக்கண்டவுடன்....

நீ அவள் கரம் பிடிப்பதை காணமுடியாமல்.....
வார்த்தைகள் பாதை மாறி என்
கண் வழியே வெளியேருகின்றன...

வார்த்தைகள் முட்டி இதயத்தை உதைக்கின்றது.....
இதயமோ முட்டி என் கண்களில் அலை பாய்கின்றது...
அலைகள் வழிகின்றன அணைகட்ட ஆளில்லை.....

அன்பே... விதியை எண்ணி உன்னை நழுவவிட்டுவிட்டேனோ??????
அய்யோ.. என்னால் முடியவில்லையடா...

உனைவிட்டு என்னைப்பிரித்த விதி
எனை இம் மண்ணைவிட்டு பிரியவும் விடவில்லை...
ம்ம்ம்ம்ம்ம்.... எனை ஈன்றவள் சுரக்கின்றாள் கண்ணில் அலையாய்..
இருப்பினும் என் அன்பே

அவன் என் கரம் பிடிக்கும் முன் அழித்திடுவேன் என்னை...
உன் நினைவுகளை சுமந்த என்னால்
அவன் உயிரை சுமக்க முயாது....
என்னால் முடியவில்லை என் செய்வேன்.....