Monday 10 September 2007

பே(போ)தை

போதையிலும் தன் நிலை மறவா
ஆடவன்
பேதையினால் தன் பாதை
மறந்தான்

மாமிமார்கள்

வீட்டுக்கு விளக்கேற்ற
மகாலஷ்மி வந்தாச்சு என்பார்கள்
எங்களுக்குத்தான் தெரியும் சோற்றுக்கு
அடுப்பேற்றப்போகிறவர் நாங்களென்று
எங்களை மட்டுமா மாட்டைக்கூடத்தான் மகாலக்ஷ்மி
என்கின்றார்கள்
கறக்கத்தான் நினைக்கிறார்கள் பாவம்
மன்னித்துவிடுங்கள் அவர்கள் மாமிமார்கள்.......