Monday 5 November 2007

நண்பனே!!!!!!!!!

எங்கோ பிறந்து.... எங்கோ வளர்ந்த.... நீ
இன்று... எனக்காக உருகுகின்றாய்....
எனக்காக சிந்திக்கின்றாய்....
எனக்காக சுரக்கின்றாய் உன் கண்ணீரை.....

நண்பனே....
உனக்காக நானும் உருகுவேன்
உனக்காக சிந்திப்பேன்...
ஆனால் நண்பா உனக்காக சுரக்க மட்டும் என் கண்ணில்
கண்ணீர் இல்லையடா... எனெனில்
நமக்கெனத்தான் நான் அழுதுமுடித்துவிட்டேனே...

நண்பனே நீ..
தோல் கொடுக்கையில் என் நண்பனாகினாய்....
மடி கொடுக்கையில் என் தாயாகினாய்....
அறிவுரைகளில் என் தந்தையாகினாய்.....
அரவணைப்பில் என் மழலையாகினாய்.....
கரம் கொடுத்து நீ உயர்த்திவிட்டாய்

உன் கரங்களை ஒருபோதும் நான் விடமாட்டேன்
ஏனினில் அது உதவிக்கரம்மட்டுமல்ல...
என்னை வழி நடத்தும் கரங்கள்...

நண்பனே.....
உன் கரங்களுக்கு கோடி முத்தங்கள்..
தயவு செய்து நீ ஒருபோதும் உன் கரங்களை உதறிவிடாதே....
தோள்கொடுத்த உன் நட்பிற்கு நன்றிகள் கோடி
நட்பே உன் கற்பை நான் என்றும் அழியாது காப்பேன்....