Wednesday, 21 May 2008

இருப்பாயா என் நண்பா....

தனிமையில் நீ கவிஞனாய் இரு
கட்டளைகளிள் அரசனாய் இரு
வேலையில் விஞ்ஞானியாய் இரு
இறப்பினில் வரலாறாய் இரு

நீ இறக்கும் அக்கணம் வரை
என் நண்பனாய் இரு...

இழக்கின்றாய்...

என்று நீ உன் பணத்தை இழக்கின்றாயோ
அன்று நீ உண்மையில் எதையும் இழக்கவில்லை

என்று உன் உடல் நலம் குன்றப்படுகின்றதோ
அன்று நீ எதையோ இழக்கின்றாய்

இருப்பினும் நண்பா....

என்று நீ உன் நன்னடத்தையை
அன்று நீ எல்லாவற்றையும் இழக்கின்றாய்.....

Sunday, 11 May 2008

பூவே

பூவே உன்னிடம் போட்டியிடவந்துள்ளேன்
காரணமோ பல...........

ஆமாம்... காத்திருந்த பூசாரி நான் இருக்க
நேற்று பூத்த பூ நீ சிவனடி சேர்ந்துவிட்டாய்

காத்திருந்த காதலன் நான் இருக்க
நேற்று பூத்த பூ நீ காதலி கூந்தல் சேர்ந்துவிட்டாய்

இப்படிக்காரணங்கள் எத்தனையோ
ஆகினும் பூவே சிறந்தவளும் நீ தான்
வென்றதும் நீ தான் காரணம்

அவளுக்கு நீ சூடும் பூ
நானோ புல்
அறுகம் புல்லெனில் மகிழ்வேன்
ஆனால் நானோ வெரும் புல் என்றுவிட்டாள்.....