Wednesday 2 September 2009

என் காதல்

என் கண்களை மூடுகின்றேன் உன்னை சிறையடைத்தபடி
என் இதயம் திறக்கிறது உன் இதயத்துடிப்பில்....


உனக்கேன் இது புரியவில்லை
காதல் என்பது இவ்வுலகில் சொல்லிப்புறிவதில்லை
உனக்கோ அது சொன்னாலும் புரிவதில்லை


கடிகாரததில் நொடி முள்ளும் சுழல்கின்றது...
மணித்தியாலங்களும் நகர்கின்றன...
உன் கண்ணிமைக்கும் சம்மதத்திற்காக
என் இதயதுடிப்பை மட்டும் நிறுத்திவைக்கின்றேன் நான்...


உன் முரட்டுப்பிடிவாதமும் ஏனோ பிடிக்கின்றது
அதனால் தானோ என் இதயம் கிடந்து துடிக்கிறது...
உன் இதயத்துடிப்பை உள்வாங்க...


உன்னை என்னுள் ஒளித்துவிட்டேன்
ஆனால் என்னை உன் முன் ஒளிக்கமாட்டேன்...
ரகசியமாகவாவது என்னை காதலி அன்பே...
எம் காதலை உலகிற்கு அறிவிக்கமாட்டேன்


நீ தந்த காதல் காயம்...என்னுள் என்றும் ஆறாமலே...
மாற்றிக்கொள் என்கின்றாய் மருந்திட்டுக்கொள்ளவும் மனதில்லை மாற்றங்கள் ஏதும் எனக்கில்லை மருந்திட்டும் என்னுள் மாற்றமில்லை

2 comments:

angel said...

nandraga ulathu thodarnthu eluthungal

Krish said...

mikka nandriii..thx :D