Wednesday 23 September 2009

எங்கள் காமாட்சி அம்மா சரணம்


உனை இப்புவனிதனில் அழைத்திட பூஜைகள் செய்தேன்
நீயோ அசையாத்திடத்துடனே வரவும் மறுத்தாய்
உனை தீபங்கள் காட்டியே மீண்டும் அழைத்தேன்
நீயோ பார்வையினை கட்டிவிட்டு மீண்டும் மறுத்தாய்
உனை பட்டினாள் அலங்கரித்து பொட்டும் வைத்து சேவைகள் பல செய்தேன்
நீயோ பட்டதனை பற்றவும் மறுத்துவிட்டாய்...
உன்னை சுட்டதென்ன பட்டதென்ன சொல்லிடு என்றேன்
நீயோ “என்” என்பதை ஒழித்திடு என்றே சொன்னாய்
உன்னை இப்பாவி நாம் புரிந்த்துட்டோம் என்றே சொல்ல
சட்டென்று காட்சிதர நீயும் முன் வந்தாய்....

உன்னால் “நான்“ அல்ல “நாம்“ எனும் மந்திரம் அதை நாம் அறிந்தோம்
இதைப்பரப்பிடுவோம் இவ்வுலகில் உந்தன் முன்னாள்
நம்பிடுவாய் வார்த்தைகளை என்றே சொல்ல
நம்பி எமக்கு அருளியவளே எங்கள் காமாட்சியம்மா.....

No comments: