Wednesday 23 September 2009

பக்தர் மனம் குடிகொண்டாயம்மா...


ஒன்பது ராத்திரிகள் உனதேயம்மா
அதில் மும்மூன்று வேடத்தில் நீயேயம்மா

வீரநாயகி துர்க்கையம்மா
செல்வபாமினி லக்க்ஷ்மியம்மா
கல்விப்பேறூற்று சரஷ்வதியம்மா
நீயே எங்கள் காமாட்சியம்மா....

துர்க்கை வேடத்தில் வந்தாயம்மா
துஷ்டரை அழித்திடவே வந்தாயம்மா....

திருமகள் வேடத்தில் வந்தாயம்மா
திருவருட்செல்வம் பெருகிடவே வந்தாயம்மா....

கலைவாணி வேடத்தில வந்தாயம்மா
கலைகள் பல தந்திடவே வந்தாயம்மா....

வந்தாயம்மா வந்தருள் தந்தாயம்மா
கொண்டாயம்மா பக்தர் மனம் குடிகொண்டாயம்மா....

4 comments:

Anonymous said...

congrulation very nice

Tamilparks said...

congrulation very nice

Tamilparks said...

அருமை வாழ்த்துக்கள்

Krish said...

nandriii tamilpark